search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை"

    ஊத்துக்கோட்டை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமத்தை சேர்ந்தவர் கிஷ்டாரெட்டி. இவரது மகள் ருத்ராதேவி (வயது 23). இவருக்கும் சென்னை நந்தனத்தை சேர்ந்த அய்யப்பன் (34) என்பவருக்கும் கடந்த அக்டோபர் 21-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு பிறகு கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. தலை பொங்கல் கொண்டாட ருத்ராதேவி கணவனுடன் சூளைமேனியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது.

    அய்யப்பன் மனைவியை திட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார். இதனால் மனம்உடைந்த ருத்ராதேவி மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பென்னாகரத்தில் திருமணமான 6 மாதங்கள் ஆன நிலையில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மிட்டாதார தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கோழி வியாபாரி.

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிதா என்கிற சரண்யா (வயது 22) என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று சந்தோஷ்குமார் வெளியே புறப்பட்டு சென்றுவிட்டார். இரவு வீட்டில் தனியாக இருந்த சரண்யா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு சந்தோஷ்குமார் திரும்பி வந்து பார்த்தபோது தனது மனைவி தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது உடலை கண்டு சந்தோஷ்குமார் கதறி அழுதார்.

    இதுகுறித்து அவர் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரண்யாவின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சரண்யா என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில் சரண்யா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது கணவரிடம் உறவினர்களிடம் சப்-கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×